பாணந்துறை, ஹொறேதுடுவ எனும் பகுதியில் வைத்து குசால் மென்டிஸ் செலுத்திச் சென்ற கார் ஒருவர் மீது மோதியதில் சம்பவ இடத்திலேயே அவர் பலியானார்.
பலியானவர் 65 வயதான அப்பகுதியை சேர்ந்த ஒருவர் என இனம்காணப்பட்டுள்ளார்.
இது தொடர்பாக குசால் மென்டிஸை கைது செய்து போலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.