இலங்கை சட்டக் கல்லூரிக்கான அனுமதிப் பரீட்சை 2021 விண்ணப்பம் கோரல்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

இலங்கை சட்டக் கல்லூரிக்கான அனுமதிப் பரீட்சை 2021 விண்ணப்பம் கோரல்!

இலங்கை சட்டக் கல்லூரிக்கான அனுமதிப் பரீட்சை 2021க்கான விண்ணப்பம் கோரப்பட்டுவறுகிறது.

நுழைவுத்தேர்வுக்கு விண்ணப்பிக்க தேவையான தகைமைகள்

1. உயர் தரத்தில் 03 சித்தி
2. சாதாரண தரத்தில் தமிழ் / சிங்கள, ஆங்கிலம் 2 பாடத்திலும் திறமைச் சித்தி

வயதெல்லை :- 18 பூர்த்தி.

நுழைவுத்தேர்வு பின்வரும் வினாத்தாள்களை கொண்டது.

1. பொதுஅறிவு + நுண்ணறிவு (2 hours)
2. மொழியறிவு (3 hours)

மொழிமூலம் :-

நீங்கள் தமிழ் மொழிமூலத்தை தெரிவு செய்வீர்களாயின் GK + IQ வினாத்தாளினை தமிழ் மொழியிலும் மொழியறிவு வினாத்தாளானது ஆங்கில மொழியறிவு வினாத்தாளாக அமையும்.

நீங்கள் ஆங்கில மொழிமூலத்தை தெரிவு செய்வீர்களாயின் GK+ IQ வினாத்தாளினை ஆங்கில மொழியிலும் மொழியறிவு வினாத்தாளானது தமிழ் மொழியறிவு வினாத்தாளாக அமையும்.

புள்ளித் திட்டம்

1. GK ( 50 Q ) + IQ ( 50 Q ) = 100 marks.
2. மொழியறிவு = 100 marks.

Note :-  ஒவ்வொரு வினாத்தாளில் 50 புள்ளிகளுக்கு மேல் பெறவேண்டுமென்பது கட்டாயமானது.

இறுதி வருடம் (2019) இடம்பெற்ற நுழைவுத்தேர்வின் வெட்டுப்புள்ளி :- 129

தெரிவாகும் மாணவர்கள் எண்ணிக்கை :- 230+ Students.

சரி நீங்கள் நுழைவுத்தேர்வில் சித்தியடைந்துவிட்டிர்களாயின் இனி சட்டக்கல்லூரி கற்றல் பற்றி பார்ப்போம்.

மொத்தம் 3.5 வருடங்கள்
3 வருடங்கள் கற்றல்

ஒவ்வொரு வருட முடிவில் பரீட்சைகள் இடம்பெறும். (ஒவ்வொருவரிடமும் 8 வினாத்தாள்கள்)

Class வரவு (Class Attendance)

80% வரவு எதிர்பார்க்கப்படுகிறது ஆனால் 0% வரவு இருந்தாலும் பரீட்சைக்கு அனுமதி வழங்கப்பட்டிருந்தது அதன் பின்னர் 50% இருந்தவர்களுக்கு பரீட்சைக்கு அனுமதி வழங்கப்பட்டிருந்தது. ஆனால் தற்போது " Finger Pirint " Systems நடைமுறைக்கு கொண்டுவரப்பட்டிருப்பது சிறப்பம்சமாகும்.

6 Months பயிற்சி (Apprentice)

3.5 வருடங்கள் முடிவடைந்ததும் உச்ச நீதிமன்றத்தில் சட்டத்தரணியாக சத்தியப்பிரமாணம் மேற்கொள்ள முடியும்.


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.