நுழைவுத்தேர்வுக்கு விண்ணப்பிக்க தேவையான தகைமைகள்
1. உயர் தரத்தில் 03 சித்தி
2. சாதாரண தரத்தில் தமிழ் / சிங்கள, ஆங்கிலம் 2 பாடத்திலும் திறமைச் சித்தி
வயதெல்லை :- 18 பூர்த்தி.
நுழைவுத்தேர்வு பின்வரும் வினாத்தாள்களை கொண்டது.
1. பொதுஅறிவு + நுண்ணறிவு (2 hours)
2. மொழியறிவு (3 hours)
மொழிமூலம் :-
நீங்கள் தமிழ் மொழிமூலத்தை தெரிவு செய்வீர்களாயின் GK + IQ வினாத்தாளினை தமிழ் மொழியிலும் மொழியறிவு வினாத்தாளானது ஆங்கில மொழியறிவு வினாத்தாளாக அமையும்.
நீங்கள் ஆங்கில மொழிமூலத்தை தெரிவு செய்வீர்களாயின் GK+ IQ வினாத்தாளினை ஆங்கில மொழியிலும் மொழியறிவு வினாத்தாளானது தமிழ் மொழியறிவு வினாத்தாளாக அமையும்.
புள்ளித் திட்டம்
1. GK ( 50 Q ) + IQ ( 50 Q ) = 100 marks.
2. மொழியறிவு = 100 marks.
Note :- ஒவ்வொரு வினாத்தாளில் 50 புள்ளிகளுக்கு மேல் பெறவேண்டுமென்பது கட்டாயமானது.
இறுதி வருடம் (2019) இடம்பெற்ற நுழைவுத்தேர்வின் வெட்டுப்புள்ளி :- 129
தெரிவாகும் மாணவர்கள் எண்ணிக்கை :- 230+ Students.
சரி நீங்கள் நுழைவுத்தேர்வில் சித்தியடைந்துவிட்டிர்களாயின் இனி சட்டக்கல்லூரி கற்றல் பற்றி பார்ப்போம்.
மொத்தம் 3.5 வருடங்கள்
3 வருடங்கள் கற்றல்
ஒவ்வொரு வருட முடிவில் பரீட்சைகள் இடம்பெறும். (ஒவ்வொருவரிடமும் 8 வினாத்தாள்கள்)
Class வரவு (Class Attendance)
80% வரவு எதிர்பார்க்கப்படுகிறது ஆனால் 0% வரவு இருந்தாலும் பரீட்சைக்கு அனுமதி வழங்கப்பட்டிருந்தது அதன் பின்னர் 50% இருந்தவர்களுக்கு பரீட்சைக்கு அனுமதி வழங்கப்பட்டிருந்தது. ஆனால் தற்போது " Finger Pirint " Systems நடைமுறைக்கு கொண்டுவரப்பட்டிருப்பது சிறப்பம்சமாகும்.
6 Months பயிற்சி (Apprentice)
3.5 வருடங்கள் முடிவடைந்ததும் உச்ச நீதிமன்றத்தில் சட்டத்தரணியாக சத்தியப்பிரமாணம் மேற்கொள்ள முடியும்.