மேலும் பொதுத் தேர்தலின் பின்னர் கட்சி தலைமை பதவியில் இருந்து விலகுவதாக அவர் அறிவித்துள்ளார்.
களுத்துறை பகுதியில் நேற்று (04) இடம்பெற்ற கூட்டத்தின் போது அவர் இவ்வாறு தெரிவித்திருந்தார்.
மேலும் தெரிவிக்கையில்,
எதிர்வரும் காலங்களில் கட்சியின் ஆலோசகராக மாத்திரம் செயற்பட உள்ளதாகவும், கட்சி பிளவுபட்டுள்ளதாக பலர் கூறுகின்ற போதும் ஶ்ரீலங்கா சுதந்திர கட்சி இன்னும் பலதாக உள்ளதென அவர் தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் காலங்களில் இளைய தலைமை ஊடாக கட்சி மேலும் முன்னேற்றமடையும் என அவர் சுட்டிக்காட்டினார்.