எனது கட்சியை இளைஞர்களின் கைக்கு ஒப்படைக்க தீர்மானித்துள்ளேன். -மைத்திரி

advertise here on top
Join YazhNews WhatsApp Community

எனது கட்சியை இளைஞர்களின் கைக்கு ஒப்படைக்க தீர்மானித்துள்ளேன். -மைத்திரி

பாரம்பரிய அரசியலை ஒதுக்கி புதிய சிநதனை உள்ள இளைஞர்களின் கைக்கு ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தலைமையை ஒப்படைக்க உள்ளதாக கட்சியின் தலைவர், முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

மேலும் பொதுத் தேர்தலின் பின்னர் கட்சி தலைமை பதவியில் இருந்து விலகுவதாக அவர் அறிவித்துள்ளார். 

களுத்துறை பகுதியில் நேற்று (04) இடம்பெற்ற கூட்டத்தின் போது அவர் இவ்வாறு தெரிவித்திருந்தார். 

மேலும் தெரிவிக்கையில்,


எதிர்வரும் காலங்களில் கட்சியின் ஆலோசகராக மாத்திரம் செயற்பட உள்ளதாகவும், கட்சி பிளவுபட்டுள்ளதாக பலர் கூறுகின்ற போதும் ஶ்ரீலங்கா சுதந்திர கட்சி இன்னும் பலதாக உள்ளதென அவர் தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் காலங்களில் இளைய தலைமை ஊடாக கட்சி மேலும் முன்னேற்றமடையும் என அவர் சுட்டிக்காட்டினார். 

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.