அதன்படி, இதுவரை வழங்கப்பட் 45 நிமிட காலம் ஒரு மணி நேரமாக நீட்டிக்கப்பட்டுள்ளது.
இன்று (29) கல்வி அமைச்சில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கல்வி அமைச்சர் டலஸ் அலகப்பெரும இதனைத் தெரிவித்திருந்தார்.
இவ் ஆண்டு தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை எதிர்வரும் அக்டோபர் 11 ஆம் திகதி நடைபெற உள்ளது.
தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சையை எதிர்கொள்ளும் மாணவர்களுக்கு 4 மாதங்களுக்கும் மேலாக பாடசாலைகளுக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டமையைக் கருத்திற்கொண்டு நிவாரணம் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
அதேபோன்று, இரண்டாவது வினாத்தாளில் உள்ள 4 தெரிவுகளைக் கொண்ட கேள்விகளில் இம்முறை 3 தெரிவுளாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது எனவும் கல்வி அமைச்சர் தெரிவித்தார்.