எதிர்வரும் வெள்ளிக்கிழமை சர்வதேச கிரிக்கட் சபை அதிகாரிகள் கூடும் போது உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படும் என சர்வதேச ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
இதன் மூலம் IPL போட்டிகளை இந்த வருடத்தில் நடத்துவதற்கான வாய்ப்பு இந்திய கிரிக்கட் கட்டுப்பாட்டு சபைக்கு கிடைக்கும் என நம்பப்படுகின்றது.
எப்படியிருப்பினும் கொரோனா வைரஸ் தொற்று இந்தியாவில் பாரிய அளவில் பரவி வருவதன் காரணமாக பலகோடி டொலர் பெறுமதியான லீக் போட்டிகளை இந்தியாவில் நடத்துவது ஏற்புடையது இல்லை என பிரபல விளையாட்டுத்துறை ஊடகவியலாளர்கள் கருத்து வெளியிட்டுள்ளனர்.