புலி உறுப்பினர்கள் அல்லாதவர்கள் பலர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்! -ஹிருணிகா

advertise here on top
Join YazhNews WhatsApp Community

புலி உறுப்பினர்கள் அல்லாதவர்கள் பலர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்! -ஹிருணிகா

hirunika premachandra
எவ்வித குற்றச்சாட்டுக்களும் இல்லாமல் விடுதலைப் புலி உறுப்பினர்கள் எனக் கூறப்படும் பலர் சிறைச்சாலைக்குள் உள்ளனர் என ஹிருணிகா பிரேமச்சந்திர தெரிவித்துள்ளார்.

இந்த விடயம் குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில் “இன்று சிறைச்சாலைகளில் புலிகளின் உறுப்பினர்கள் எனக் கூறப்படும் பலர் இருக்கிறார்கள். இவர்களின் சிலருக்கு வழக்கு கூட இன்னும் தொடரப்படவில்லை.

அதேபோல், இராணுவத்தினரும் நீண்ட காலமாக சிறைகளில் இருக்கிறார்கள். இதுதான் இன்றைய நிலைமை. இந்த நிலையில், கருணா தொடர்பாக அனைவரும் கருத்து வெளியிடுகிறார்கள். கருணாவை நாம் விமர்சித்தபோது, எம் மீது குற்றம் சாட்டினார்கள்.

இன்று கருணா, ராஜபக்ஷவினருக்கு சிறந்த ஒரு நபராகவே காணப்படுகிறார். இதனால் தான் கருணாவின் கருத்தை மூடி மறைக்க இவர்கள் முற்படுகிறார்கள்.” என தெரிவித்திருந்தார்.

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.