இன்று 06 பேர் இனம்காணப்பட்டதுடன் 37 பேர் பூரண குணம்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

இன்று 06 பேர் இனம்காணப்பட்டதுடன் 37 பேர் பூரண குணம்!

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள மொத்த நோயாளிகளின் எண்ணிக்கை 2,053 ஆக அதிகரித்துள்ளது.

இன்றைய தினம் (01) மாத்திரம் புதிதாக 06 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதுடன், அவர்களில் நான்கு பேர் பங்களாதேஷியில் இருந்து நாடு திரும்பியவர்கள் என்றும் ஒருவர் ஐக்கிய அரபு இராஜ்ஜியத்தில் இருந்து நாடு திரும்பியவர் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் ஒருவர் பிரித்தானியாவில் இருந்து நாடு திரும்பிய நிலையில் தனிமைப்படுத்தல் நிலையத்தில் இருந்தவர் என்றும் சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

இதேவேளை இன்று 37 பேர் குணமடைந்த நிலையில் குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கையும் 1,748 ஆக உயர்ந்துள்ளது.

அதன்படி தற்போது தொற்று உறுதியானவர்களில் 294 பேர் தொடர்ந்தும் வைத்திய கண்காணிப்பில் உள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு அறிவித்துள்ளது.

இதேவேளை 55 பேர் கொரோனா வைரஸ் தொற்று சந்தேகத்தில் சிகிச்சை பெற்றுவருவதுடன் 11 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.