ஹிஜாஸ் ஹிஸ்புல்லாவின் கோரிக்கை நிராகரிப்பு!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

ஹிஜாஸ் ஹிஸ்புல்லாவின் கோரிக்கை நிராகரிப்பு!

hejaz hizbullah
ஈஸ்டர் தாக்குதல் குண்டுதாரிகளுக்கு ஒத்துழைப்பு வழங்கியதாக சந்தேகத்தின் பேரில் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்கு உள்ளாக்கப்படும் சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லாவை நீதிமன்றில் முன்னிலையாக்குமாறு அவரது சட்டத்தரணிகள் விடுத்த கோரிக்கையை நீதிமன்றம் நிராகரித்துள்ளது.

குறித்த விடயம் தொடர்பான வழக்கு இன்று (01) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் குறித்த கோரிக்கையை நிராகரித்துள்ளது.

தடுத்து வைக்கப்பட்டுள்ள சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லாவை நீதிமன்றில் முன்னிலையாக்குமாறு அவரது சட்டத்தரணிகள் கடந்த 17ஆம் திகதி கோரிக்கை விடுத்திருந்தனர்.

இந்த நிலையில், குறித்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன்போது கருத்துரைத்த கொழும்பு கோட்டை நீதவான் ரங்க திஸாநாயக்க, சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லா பயங்கரவாத தரைடச் சட்டத்தின்கீழ் கைதுசெய்யப்பட்டு, தடுத்துவைத்து விசாரணைக்கு உள்ளாக்கப்படுகின்றமையினால், அவரை நீதிமன்றில் முன்னிலைப்படுத்துவதற்கான தகைமை இல்லை எனக் காரணம் கூறி அவரது கோரிக்கை நிராகரிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.