முன்னாள் ஜனாதிபதி குமரதுங்கா கூறுகையில், அரசாங்க செலவுகளை குறைக்கவும், நாட்டின் நிதி சிக்கல்களை குறைக்கவும் இந்த வாகனங்கள் திருப்பி அனுப்பப்பட்டுள்ளதாக ஜனாதிபதியின் செயலாளர் பி.பி. ஜெயசுந்தேரவிற்கு அனுப்பிய கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார்.
தனக்கு 12 உத்தியோகபூர்வ வாகனங்கள் கிடைக்கப் பெற்றிருந்தன. அதில் தனிப்பட்ட மற்றும் உத்தியோகபூர்வ பயன்பாட்டிற்காக 09, மற்றும் அவரது பாதுகாப்பு பிரிவுக்கு 03 ஆகியவை ஒதுக்கப்பட்டுள்ளதாக சந்திரிகா குமரதுங்க சுட்டிக்காட்டினார்.
திருப்பி கொடுக்கப்பட்ட வாகனங்களில் நிசான் ஜீப், மகேந்திர டபள் கெப் மற்றும் டொயோட்டா லேண்ட் குரூசர் ஜீப் ஆகியவை அடங்கும்.
எதிர்காலத்தில் மேலும் 08 வாகனங்கள் ஜனாதிபதி செயலகத்திற்கு திருப்பி அனுப்பப்படும் என்றும் முன்னாள் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.