ஈஸ்டர் தாக்குதலின் சூத்திரதாரி ஸஹ்ரான் ஹஷீம் இல்லை - முக்கிய அதிகாரி சாட்சியம்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

ஈஸ்டர் தாக்குதலின் சூத்திரதாரி ஸஹ்ரான் ஹஷீம் இல்லை - முக்கிய அதிகாரி சாட்சியம்!

கடந்த ஆண்டு இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் போது முக்கிய சூத்திரதாரியாக நவ்பர் மௌலவி என்பவரே செயற்பட்டு வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேசிய புலனாய்வு பிரிவின் முன்னாள் இயக்குநர் நிலாந்த ஜயவர்தன இதனை தெரிவித்துள்ளார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்து விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் இன்று முன்னிலையாகி வாக்குமூலம் வழங்கிய அவர் இதனை கூறியுள்ளார்.
$ads={1}
தாக்குதலை மேற்கொண்ட குழுவினருக்கு தலைமை தாங்கிய சஹ்ரான் ஹாசிம் தாக்குதலின் முக்கிய சூத்திரதாரியில்லை எனவும் அவர் இதன் போது குறிப்பிட்டுள்ளார்.

கட்டாரில் 19 ஆண்டுகளாக இருக்கும், சர்வதேச தொடர்புகளை பேணி வந்த நவ்பர் மௌலவி என்பவரே தாக்குதலின் பிரதான சூத்திரதாரியாக செயற்பட்டுவந்துள்ளார்.


குண்டு தாக்குதல் இடம்பெறலாம் என்பது குறித்து பத்து மாதங்களுக்கு முன்னரே தப்போதைய புலனாய்வு பிரிவின் தலைவர் சிசிர மெண்டிசிடம் தெரிவித்தேன்” என அவர் மேலும் கூறியுள்ளார்.

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.