அந்தக் கண்டத்தின் சில பகுதிகளில் நோய்த்தொற்றுக்கு ஆளாவோர் எண்ணிக்கை மீண்டும் அதிகரித்து வருகிறது.
ஜெர்மனியும், பிரிட்டனும் ஐரோப்பாவின் பெரிய பொருளியல்களைக் கொண்ட நாடுகள். கிருமிப்பரவல் அதிகரித்து வருவது கவலையளிப்பதாக அவ்விரண்டு நாடுகளும் தெரிவித்துள்ளன.
ஸ்பெயினிலிருந்து வருவோரைத் தனிமைப்படுத்த வேண்டும் என்ற பிரிட்டனின் முடிவைப் பிரதமர் போரிஸ் ஜான்சன் தற்காத்துப் பேசியுள்ளார்.
ஜெர்மனியிலும் நிலைமை சீராக இல்லை. மக்கள் பொறுப்பற்ற முறையில் நடந்து கொண்டதால், கிருமிப் பரவல் அதிகரித்திருப்பதாக அதிகாரிகள் கவலைப்படுகின்றனர்.
புதிதாகக் கிருமித்தொற்றுக்கு ஆளாகாமல் தடுப்பதற்கு பெர்லின் (Berlin) தீவிரமாக முயன்று வருகிறது.
ஸ்பெயினின் சில பகுதிகளுக்குச் செல்வதன் தொடர்பில் பயண ஆலோசனை விடுக்கப்பட்டுள்ளது.
ஸ்பெயினில் புதிதாக 900க்கும் அதிகமானோர் கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.