பொதுத் தேர்தலின் பின்னர் கொரொனா சுகாதார வழிகாட்டல் பாராளுமன்றத்திற்கு!!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

பொதுத் தேர்தலின் பின்னர் கொரொனா சுகாதார வழிகாட்டல் பாராளுமன்றத்திற்கு!!

பொதுத் தேர்தலின் பின்னர் நாடாளுமன்றம் கொவிட் -19 சவாலுக்கு முகங்கொடுத்து சுகாதாரப் பாதுகாப்புடன் அமர்வுகளை முன்னெடுப்பதற்குத் தேவையான சுகாதார வழிகாட்டல் தொகுப்பு எதிர்வரும் வெள்ளிக்கிழமை நாடாளுமன்றத்துக்கு கையளிக்கப்படவுள்ளது.

நாடாளுமன்ற தொடர்பாடல் திணைக்களம் அறிக்கை ஒன்றின் மூலம் இதனைத் தெரிவித்துள்ளது.

பொதுத் தேர்தலின் பின்னர் ஆரம்பிக்கவிருக்கும் நாடாளுமன்றத்தில் கலந்துகொள்ளும் உறுப்பினர்கள் மற்றும் பிரபுக்கள், நாடாளுமன்ற பணியாளர்கள், பாதுகாப்புப் பிரிவினர்களை கொவிட் -19 சூழலிலிருந்து பாதுகாப்பதற்கான வேலைத்திட்டங்களைத் தயாரிப்பது குறித்து ஆராயப்பட்டுள்ளது.

சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர் நாயகம், வைத்தியர் லக்ஷ்மன் கம்லத் தலைமையிலான சுகாதார அமைச்சின் குழுவினர் கடந்த 22ஆம் திகதி நாடாளுமன்றத்துக்கு விஜயம் மேற்கொண்டு இது குறித்து ஆராய்ந்துள்ளது.

சுகாதாரப் பாதுகாப்பு வழிகாட்டல்களை தயாரிக்கும்போது நாடாளுமன்ற சபா மண்டபம், உணவுக் கூடம் மற்றும் நாடாளுமன்ற நூல்நிலையம் தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்பட விருப்பதாக சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் லக்ஷ்மன் கம்லத் தெரிவித்தார்.

நாடாளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக்க தஸநாயக்கவின் வேண்டுகோளுக்கு இணங்க சுகாதார அமைச்சின் ஊடாக இந்த வழிகாட்டல் தொகுப்பு தயாரிக்கப்படுவதாக நாடாளுமன்ற தொடர்பாடல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.