இந்த அறிக்கை வட மேல் மாகாண பிரதி பொலிஸ் மா அதிபரிடம் கோரப்பட்டுள்ளது.
இந்த சம்பவத்தின் போது பொலிஸார் சட்டத்தை நடைமுறைப்படுத்தினார்களா, இல்லையா என தெளிவுபடுத்துமாறும், சட்டம் நடைமுறைப்படுத்தப்படவில்லை எனின் அதற்கான காரணம் என்ன என்பது குறித்தும் விளக்குமாறும் கோரப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஜாலிய சேனாரத்ன கூறியுள்ளார்.
சனத் நிஷாந்தவும், அவரின் ஆதரவாளர்களும் தலைக்கவசம் இன்றி தேர்தல் பிரசார நடவடிக்கைகளுக்காக மோட்டார் சைக்கிள்களில் பயணித்தமை தொடர்பான காணொளிகளும் புகைபடங்களும் சமூக வலைத்தளங்களில் வெளியாகி இருந்தமை குறிப்பிடத்தக்கது.