ஹெல்மெட் இல்லாமல் சென்ற பொதுஜன பெரமுன வேட்பாளருக்கு சிக்கல்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

ஹெல்மெட் இல்லாமல் சென்ற பொதுஜன பெரமுன வேட்பாளருக்கு சிக்கல்!

பொதுஜன பெரமுன ஊடாக புத்தளம் மாவட்டத்தில் போட்டியிடும் முன்னாள் எம்.பி சனத் நிஷாந்தவும், ஆதரவாளர்களும் தலைக்கவசமின்றி மோட்டார் சைக்கிள்களில் பயணித்த சம்பவம் தொடர்பில் பதில் பொலிஸ் மா அதிபர் அறிக்கை கோரியுள்ளார்.

இந்த அறிக்கை வட மேல் மாகாண பிரதி பொலிஸ் மா அதிபரிடம் கோரப்பட்டுள்ளது.

இந்த சம்பவத்தின் போது பொலிஸார் சட்டத்தை நடைமுறைப்படுத்தினார்களா, இல்லையா என தெளிவுபடுத்துமாறும், சட்டம் நடைமுறைப்படுத்தப்படவில்லை எனின் அதற்கான காரணம் என்ன என்பது குறித்தும் விளக்குமாறும் கோரப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஜாலிய சேனாரத்ன கூறியுள்ளார்.

சனத் நிஷாந்தவும், அவரின் ஆதரவாளர்களும் தலைக்கவசம் இன்றி தேர்தல் பிரசார நடவடிக்கைகளுக்காக மோட்டார் சைக்கிள்களில் பயணித்தமை தொடர்பான காணொளிகளும் புகைபடங்களும் சமூக வலைத்தளங்களில் வெளியாகி இருந்தமை குறிப்பிடத்தக்கது.

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.