இன்று 18 பேர் பூரண குணம்; மேலும் இருவர் தொற்றுக்கு அடையாளம்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

இன்று 18 பேர் பூரண குணம்; மேலும் இருவர் தொற்றுக்கு அடையாளம்!

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 02 பேர் இன்று இதுவரை அடையாளம் காணப்பட்டுள்ளனர் என்பதோடு மேலும் 18 பேர் குணமடைந்துள்ளனர்.

பஹ்ரைனிலிருந்து வந்த 02 பேரே இன்று இவ்வாறு அடையாளம் காணப்பட்டவர்களாவர்.

இன்று (05) இரவு 8.30 மணியளவில் தேசிய தொற்று நோய் விஞ்ஞானப் பிரிவினால் வெளியிடப்பட்ட அறிக்கையின் படி, கொரோனா தொற்றியுள்ளதாக அடையாளம் காணப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,076 ஆக அதிகரித்துள்ளது. அத்துடன் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 1,903 ஆக அதிகரித்துள்ளது.

அந்த வகையில், இலங்கையில் கொரோனா தொற்றியதாக தற்போது அடையாளம் காணப்பட்டுள்ள 2,076 பேரில் தற்போது 162 நோயாளிகள் சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதோடு, மேலும் இதுவரை 1,903 பேர் கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர். அத்துடன் இது வரை 11 பேர் மரணமடைந்துள்ளனர்.

இதேவேளை, மருத்துவமனைகளில் கொரோனா வைரஸ் தொடர்பிலான சந்தேகத்தின் அடிப்படையில் 38 பேர் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளதாக, சுகாதார மேம்பாட்டுப் பணியகம் அறிவித்துள்ளது.

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.