இந்திய சதீஸ்கர் மாநிலம் பிலாஸ்பூரில் ஆர்த்தி சிங் (21) என்ற இளம்பெண்ணின் கணவர், கவுதம் சிங் 2 வருடங்களுக்கு எதிர்பாராதவிதமாக உயிரிழந்தார்.
கணவர் உயிரிழந்ததை அடுத்து அவர் தனிமையில் பல இன்னல்களை சந்தித்துள்ளார். அப்போது மாமனாரான கிருஷ்ணா ராஜ்புத் சிங் தான் தன்னுடைய மருமகளை அன்புடன், கவனமுடன் கவனித்து வந்துள்ளார்.
இதையடுத்து, மாமானார் ஆர்த்தி சிங்கிற்கு பிடித்து போனதால், ராஜ்பூத் க்ஷத்ரிய மகாசபாவின் குழு அமைப்பின் முன்னெடுப்பில் அந்த இளம்பெண்ணை அவரது மாமனார் கிருஷ்ணா ராஜ்புத் சிங் திருமணம் செய்து கொண்டுள்ளார்.
கணவர் இறந்து 2 வருடமானதால் ஆர்த்தி சிங்கின் மருமணத்திற்கு சாதிய அமைப்பினரும் சம்மதம் தெரிவித்துள்ளனர்.
கொரோனா வைரஸ் காரணமாக அரசின் விதிமுறைக்கு உட்பட்டு ராஜ்பூத் க்ஷத்ரிய மகாசபாவினர் திருமணத்திற்கான ஏற்பாடு செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.