ஜனாதிபதி கொலை மிரட்டல் தொடர்பில் குற்றப்புலனாய்வு துறையில் முறைப்பாடு!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

ஜனாதிபதி கொலை மிரட்டல் தொடர்பில் குற்றப்புலனாய்வு துறையில் முறைப்பாடு!

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கும் பாதுகாப்பு செயலாளர் கமல் குணரத்னவுக்கும் பாதுகாப்பு அச்சுறுத்தல் இருப்பதாக கூறி சிறைச்சாலைகள் ஆணையாளர் குற்றப்புலனாய்வுத்துறையில் முறைப்பாடு ஒன்றை செய்துள்ளார்.

காலி பூஸ்ஸா முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ள பாதாள உலக உறுப்பினரான கொஸ்கொட தாரக என்ற தாரக பெரேரா வெளியிட்ட தகவலின் அடிப்படையிலேயே இந்த முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

முன்னதாக தமது சிறையறைக்கும் வந்த சிறையதிகாரிகள் சிலர் தம்மை பயமுறுத்தியபோது ஜனாதிபதியையும் பாதுகாப்பு செயலாளரையும் கொலை செய்யமுடியும் என்று கூறியதாக கொஸ்கொட தாரக ஏற்கனவே சிறைச்சாலைகள் ஆணையாளரிடம் முறையிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தநிலையில் முறைப்பாட்டுக்கு அமைய விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக காவல்துறையின் பேச்சாளர் ஜாலிய சேனாரத்ன தெரிவித்துள்ளார்

விசாரணைகளின் அடிப்படையில் அடையாளம் காணப்படுபவர்கள் மீது சட்டநடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்

Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.