அதிக நேரம் கேம் (Game) விளையாடிய இளைஞன் பலி - கொழும்பில் சம்வம்

advertise here on top
Join YazhNews WhatsApp Community

அதிக நேரம் கேம் (Game) விளையாடிய இளைஞன் பலி - கொழும்பில் சம்வம்

கடந்த சில நாட்களின் முன்னர் கொழும்பில் வசித்த தமிழ் இளைஞன் ஒருவர் அதிக நேரம் தொலைபேசியில் கேம் விளையாடியதால் கொழும்பு 13, கினரஸ்தி பெரேரா மவத்தையில் வசிக்கும் ஜெயராமன் சுரேந்திரன் (32) என்பர் உயிரிழந்திருந்தார்.

இந்நிலையில் மூளை நரம்பு வெடித்தே அவர் உயிரிழந்தார் என்பது மரண விசாரணையில் தெரிய வந்துள்ளது.

கொழும்பு மாநகரசபை கூடதல் மரணவிசாரணை அதிகாரி ஈரேஷா தேஷனி சமரவீர முன்னிலையில் மரண விசாரணை நடைபெற்றது.

இது குறித்த அறிக்கையை அவர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளார்.

அதில் , கைத்தொலைபேசியில் தொடர்ந்து கேம் விளையாடியதாலேயே இந்த மரணம் நிகழ்ந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனந்தன் தர்ஷிகா (32) அளித்த வாக்குமூலத்தில்,

“எங்களுக்கு ஒரு குழந்தை உள்ளது. கணவருக்கு முன்பு இரைப்பை குடல் அழற்சி இருந்தது. அவருக்கு வேறு நோய் இல்லை. இதற்கிடையில், அவர் இரவில் தொலைபேசியில் கேம் விளையாடுவது வழக்கம். தொடர்ந்து கேம் விளையாடக்கூடாது என அவரிடம் கூறினாலும், அவர் அதை கேட்காமல் தொடர்ந்து விளையாடினார்.
$ads={1}
நான் அன்று குழந்தைகளுடன் தூங்கினேன். அதிகாலை 2.00 மணியளவில் அவர் குளியலறையில் இருப்பது போல் உணர்ந்தேன். ஆனால் அதிகாலை 2.30 மணியளவில் திரும்பிப் பார்த்தபோதும் அவர் படுக்கையில் இல்லை. அதனால் நான் குளியலறையின் கதவைத் திறந்தேன். அவர் தண்ணீர் நிரம்பிய ஒரு பாத்திரத்தில் விழுந்து கிடப்பதைக் கண்டேன். நாங்கள் அவரை கொழும்பு தேசிய மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றோம்” என்று கூறினார்.

இந்நிலையில் “மருத்துவ அறிக்கையின்படி, மூளையில் நரம்பு சிதைந்து மூளையில் இரத்தப்போக்கு காரணமாக மரணம் நிகழ்ந்திருந்தது. தொடர்ந்து கேம் விளையாடியது, உடலின் இரத்த அழுத்தத்தை பாதித்ததால் இந்த நிலைமை ஏற்பட்டிருக்கலாமென தடயவியல் நோயியல் நிபுணரின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது என மரண விசாரணை அதிகாரியின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை இளைய தலைமுறையினரில் பலர் கைத்தொலைபேசியில் மூழ்கியிருப்பதன் ஆபத்தையும் வைத்தியர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

அத்துடன் லொக் டவுன் காலத்திலும், விடுமுறையிலும் வீட்டு முற்றத்திற்கே வராமல் கைத்தொலைபேசியுடன் பிள்ளைகள் உட்கார்ந்திருப்பதன் ஆபத்தை பெற்றோர் உணர்ந்து கொள்ள வேண்டுமென வைத்தியர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.