வெலிகட சிறைக்கைதி கொலை சம்பவம் தொடர்பில் குற்றவாளியான பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவின் முன்னாள் பொலிஸ் பரிசோதகர் நியோமல் ரங்கஜீவ தன்னிடம் மனிதாபிமானமற்ற முறையில் நடந்து கொண்டதாக புகைப்பட ஊடகவியலாளர் ஒருவர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.
தான் வழக்கு விசாரணை ஒன்று தொடர்பில் செய்தி சேகரிப்பதற்காக கொழும்பு மேல் நீதிமன்றத்திற்கு சென்றதாக குறித்த முறைப்பாட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதன்போது புகைப்படம் எடுத்துக் கொண்டிருந்த தன்னை முன்னாள் பொலிஸ் பரிசோதகர் நியோமல் ரங்கஜீவ பலவந்தமாக நீதிமன்ற பொலிஸ் முகாமிற்கு இழுத்துச் சென்று தாக்குதல் மேற்கொண்டதாக அவர் தனது முறைப்பாட்டில் குறிப்பிட்டுள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பில் விஷேட பொலிஸ் குழுக்கள் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
- Adaderana