கொரோனா இரண்டாம் அலைக்கு சாத்தியம் - கந்தகாடு புனர்வாழ்வு நிலையத்தில் கைதிகளை பார்வையிட வந்த ஏராளமான குடும்ப உறுப்பினர்கள் ; இராணுவத் தளபதி சவேந்திர சில்வா

advertise here on top
Join YazhNews WhatsApp Community

கொரோனா இரண்டாம் அலைக்கு சாத்தியம் - கந்தகாடு புனர்வாழ்வு நிலையத்தில் கைதிகளை பார்வையிட வந்த ஏராளமான குடும்ப உறுப்பினர்கள் ; இராணுவத் தளபதி சவேந்திர சில்வா

கந்தகாடு புனர்வாழ்வு நிலையத்தில் கைதிகளை பார்வையிட வந்த அவர்களின் குடும்ப உறுப்பினர்கள் 119 பேர் தற்போது இனங்காணப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்

குறித்த தரப்பினரை இராணுவத்தின் பங்களிப்புடன் தனிமைப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், குறித்த உறவினர்கள் அனைவரும் சுகாதார நடைமுறைகளுக்கு அமைய கைதிகளை சந்தித்துள்ளனர்.


கந்தகாடு புனர்வாழ்வு மத்திய நிலையத்தில் இனங்காணப்பட்ட கொரோனா தொற்றாளர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக அதன் அருகில் அமைந்துள்ள கந்தகாடு தனிமைப்படுத்தல் மத்திய நிலையம் வைத்தியசாலையாக மாற்றியமைக்கப்பட்டுள்ளது.

கொவிட் 19 வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்ட கந்தகாடு புனர்வாழ்வு நிலையத்தின் ஆலோசகராக பணிபுரிந்த பெண்ணின் குடும்ப உறுப்பினர்களும் தற்போது சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

அதேபோல் கந்தகாடு புனர்வாழ்வு நிலையத்தில் இருந்து விடுமுறைக்காக சென்றுள்ள 08 ஆலோசகர்களை மீள அழைத்துக்கொள்ள நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.