கொழும்பு நகர சபை எல்லைக்குட்பட்ட பகுதிகளில் வசிக்கும் நபர்களிடம் இந்த பரிசோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளதாக பிரதான சுகாதார வைத்திய அதிகாரி தெரிவித்துள்ளார்.
அதற்கமைய தெரிவு செய்யப்பட்ட சிலரிடம் மாத்திரம் உயிரியல் மாதிரிகள் பெற்றுக் கொண்டு பரிசோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளது.
வைரஸ் உடலுக்குள் தொற்றியுள்ளதா என அறிந்து கொள்வதற்காக இந்த பரிசோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என குறிப்பிடப்படுகின்றது.