மோட்டார் சைக்கிளில் ஹெல்மட் அணிய வேண்டும் என்பது எனக்கு தெரியாது - சனத் நிஷாந்த

advertise here on top
Join YazhNews WhatsApp Community

மோட்டார் சைக்கிளில் ஹெல்மட் அணிய வேண்டும் என்பது எனக்கு தெரியாது - சனத் நிஷாந்த

ஹெல்மட் அணியாமல் மோட்டார்சைக்கிளில் பயணிப்பது பெரிய குற்றம் என்பதை தான் அறிந்திருக்கவில்லை என முன்னாள் ராஜாங்க அமைச்சரும், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் புத்தளம் மாவட்ட வேட்பாளருமான சனத் நிஷாந்த தெரிவித்துள்ளார்.

புத்தளத்தில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் வைத்து அவர் இதனை கூறியுள்ளார்.

மேலும் தெரிவிக்கையில்,

தலைக்கவசத்தை அணியாது மோட்டார் சைக்கிளில் சென்ற நேரத்தில் அது குற்றம் என்பது எனக்கு தெரியாது.

போக்குவரத்துச் சட்டத்திற்கு அமைய தலை கவசம் அணியது சென்றமைக்கு 5 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கலாம்.

அதனை செலுத்த நான் தயாராக இருக்கின்றேன் எனவும் சனத் நிஷாந்த குறிப்பிட்டுள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பாக தேர்தல் ஆணைக்குழுவின் அறிவிப்புக்கு அமைய பொலிஸார் விசாரணை ஒன்றையும் ஆரம்பித்துள்ளனர்.

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.