இதனடிப்படையில் படித்த புத்திசாலிகளை நாடாளுமன்றத்திற்கு தெரிவு செய்து அனுப்ப வேண்டும் எனவும் இதற்காகவே வியத் கம அமைப்பின் உறுப்பினர்களுக்கு இம்முறை தேர்தலில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் வைத்து அவர் இதனை தெரிவித்துள்ளார்.
இந்த செய்தியாளர் சந்திப்பில் கலந்துக்கொண்ட செய்தியாளர்கள், பிசன்ன ரணவீர கடந்த நாடாளுமன்றத்தில் நடந்து கொண்ட விதம் தொடர்பாக கேள்வி எழுப்பியுள்ளனர்.
இதற்கு பதிலளித்துள்ள பிரசன்ன ரணவீர, ஜனநாயகத்தை பாதுகாக்கவே தான் நாடாளுமன்றத்தில் மிளகாய் தூள் தாக்குதலை நடத்தியதாகவும் இதற்கு முன்னர் தான் கூறியதை தற்போதும் ஏற்றுக்கொள்வதாகவும் கூறியுள்ளார்.
மிளகாய் தூளை கொண்டு தாக்குதல் நடத்தியதை ஜனாதிபதி மாத்திரமல்ல நானும் ஏற்றுக்கொள்ள மாட்டேன்.
ஜனநாயகத்தை பாதுகாப்பதற்காக அன்று அதனை நான் செய்ய நேரிட்டது எனவும் பிரசன்ன ரணவீர குறிப்பிட்டுள்ளார்.