மொறட்டுவ பல்கலைக்கழகத்தில் புதிய மருத்துவப்பீடம்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

மொறட்டுவ பல்கலைக்கழகத்தில் புதிய மருத்துவப்பீடம்!

மொறட்டுவ பல்கலைக்கழகத்தில் மருத்துவ பீடமொன்றை ஸ்தாபிப்பதற்காக தற்பொழுது திட்டம் வகுக்கப்பட்டு வருவதுடன் அதன் ஆய்வு நடவடிக்கைகளை விரைவாக ஆரம்பிப்பதற்கு எதிர்பார்க்கப்பட்டுள்ளதாக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். 

உத்தேச மருத்துவ பிரிவை களுத்துறை பொது வைத்தியசாலை அமைக்க எதிர்ப்பார்ப்பதாகவும் தெரிவித்துள்ளார். 

சம்பந்தப்பட்ட ஒத்துழைப்பு பயிற்சி நடவடிக்கைகளை ஹோமாகம ஆதார வைத்தியசாலைக்கு வழங்க ஆலோசிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். 

அதனடிப்படையில் களுத்துறை பொது வைத்தியசாலை மற்றும் ஹோமாகம ஆதார வைத்தியசாலைகளை போதனா வைத்தியசாலை என்ற ரீதியில் தரமுயர்த்துவதற்காக சுகாதாரம் மற்றும் சுதேசிய வைத்திய சேவைகள் அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பரிந்துரைக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. 

Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.