இந்த நிலையில் மஹேல இன்று காலை விளையாட்டுத்துறை அமைச்சின் விசேட விசாரணைப் பிரிவிற்கு வருகை தந்திருந்தார். இதன் போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த மஹேல குறித்த விசாரணைகளுக்கு முழு ஒத்துழைப்பையும் தருவதாகவும் குறிப்பிட்டிருந்தார்.
இது தொடர்பாக மேலும் கருத்து தெரிவித்த மஹேல "நான் கிரிக்கெட் விளையாட்டை மிகவும் நேசிப்பவன். எனவே விளையாட்டுத்துறை அமைச்சின் விசேட விசாரணைப் பிரிவினருக்கு தேவையான தகவல்களை வழங்குவது எனது பொறுப்பாகும்.
நேற்று (02) இரவு 11.30 மணியளவில் இன்றைய தினம் விசாரணை பிரிவில் ஆஜராக வேண்டாம் என எனக்கு அறிவிக்கப்பட்ட நிலையில் நான் தனிப்பட்ட காரணங்களால் விசாரணை பிரிவில் ஆஜராக மறுத்ததாக இன்று காலை சில ஊடகங்கள் அறிவித்திருந்தது. அதை நான் அவதானித்ததேன். இதன் காரணமாகவே நான் இன்று விசாரணை பிரிவில் ஆஜராகினேன்." என குறிப்பிட்டிருந்தார்.
ஆட்ட நிர்ணய மோசடி குறித்த விசாரணை பிரிவில் முன்னாள் அமைச்சர் மஹிந்தானந்த அலுத்கமகே, முன்னாள் தெரிவுக்குழு தலைவர் அரவிந்த டி சில்வா, குமார் சங்கக்கார மற்றும் உபுல் தரங்க ஆகியோர் வாக்குமூலம் வழங்கியிருந்தனர்.