விபத்து நடந்த தருணத்தில் குசல் மெண்டிஸ் குடிபோதையில் இருந்தார என்பதற்கான வைத்திய பரிசோதனையே இடம்பெறவுள்ளதாக பொலிஸ் ஊடக தொடர்பாளர் எஸ்.எஸ்.பி ஜாலியா சேனரத்ன தெரிவித்துள்ளார்.
மருத்துவ பரிசோதனைக்கு பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
குசல் மெண்டிஸ் ஓட்டி வந்த கார் உடன் ஒருவர் மோதுண்டு உயிரிழந்துள்ளார். இறந்தவர் பானதுரை பிரதேசத்தினை சேர்ந்த 64 வயதுடையவர்.
விபத்து நடந்த நேரத்தில் குசல் மெண்டிஸ் ஓட்டி வந்த காரில் கிரிக்கெட் வீரர் அவிஷ்க பெர்னாண்டோவும் இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.