வேகப்பந்து வீச்சாளர் ஜோஃப்ரா ஆர்ச்சர் இன்று (16) காலை மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட்
போட்டியில் இருந்து விலக்கப்பட்டுள்ளார்.
அணியின் கடுமையான கோவிட் 19 உயிர் பாதுகாப்பு நெறிமுறைகளை மீறியதற்காகவே இவ்வாறு இடைனிறுத்தம்
செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இது இங்கிலாந்து அணிக்கு இப்போட்டியில் மிகப்பெரிய ஓர் இழப்பு என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்று காலை வெளியிடப்பட்ட இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் கிரிக்கெட் வாரியத்தின் அறிக்கை ஒன்றில் இவ்வாறு அணியின் கோவிட்19 விதிகளை மீறியதற்காக ஆர்ச்சர் அணியில் இருந்து நீக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.