இனி யாசகம் கேட்கத் தடை!!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

இனி யாசகம் கேட்கத் தடை!!

கொறோனா தொற்று நோயைக் கட்டுப்படுத்தும் வகையில், அரச மற்றும் தனியார் பஸ் வண்டிகள் மற்றும் புகையிரதங்களிலும் யாசகம் கேட்பதை நிறுத்துவதற்கான நடவடிக்கை எடுக்குமாறு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.

போக்குவரத்து அமைச்சர் மஹிந்த அமரவீரவினால், உரிய நிறுவனங்களின் தலைவர்களுக்கும் புகையிரத திணைக்கள பொது முகாமையாளருக்கும் இவ்வாறு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.

நேற்று (15) இடம்பெற்ற கலந்துரையாடலின்போது, குறித்த ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.

இக்கலந்துரையாடலின்போது, கொவிட்-19 ஐ தடுக்கும் வகையில் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.