கந்தகாடு முகாமிலிருந்து இருவர் தப்பியோட்டம் - அச்சத்தில் மக்கள்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

கந்தகாடு முகாமிலிருந்து இருவர் தப்பியோட்டம் - அச்சத்தில் மக்கள்!

கந்தகாடு புனர்வாழ்வு நிலையத்தில் இருந்து தப்பிச் சென்ற சந்தேக நபர் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கொரோனா வைரஸ் தொற்றியிருக்கலாம் என சந்தேகத்திற்கு அமைய வத்தளை பொலிஸார் அவர்களை கைது செய்துள்ளனர்.


கைது செய்யப்பட்டவர்கள் பீசீஆர் பரிசோதனைக்காக வெலிசர வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இவர்கள் வத்தளை ஹேகித்த மற்றும் மாபொல முத்துராஜ மாவத்தையை சேர்ந்தவர்கள் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


குறித்த இருவரும் கைது செய்யப்பட்ட பின்னர் அவர்களுடன் பழகியவர்கள், தொடர்பில் இருந்தவர்கள் கடும் அச்சத்தில் இருப்பதாக தெரியவந்துள்ளது.

வத்தளை பொலிஸார் மற்றும் வத்தளை சுகாதார அதிகாரிகள் இணைந்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.