கொரோனா வைரஸ் தொற்றியிருக்கலாம் என சந்தேகத்திற்கு அமைய வத்தளை பொலிஸார் அவர்களை கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்கள் பீசீஆர் பரிசோதனைக்காக வெலிசர வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இவர்கள் வத்தளை ஹேகித்த மற்றும் மாபொல முத்துராஜ மாவத்தையை சேர்ந்தவர்கள் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த இருவரும் கைது செய்யப்பட்ட பின்னர் அவர்களுடன் பழகியவர்கள், தொடர்பில் இருந்தவர்கள் கடும் அச்சத்தில் இருப்பதாக தெரியவந்துள்ளது.
வத்தளை பொலிஸார் மற்றும் வத்தளை சுகாதார அதிகாரிகள் இணைந்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.