'கொழும்பு கார்கோ எக்ஸ்பிரஸ்' எனும் சரக்கு சேவைக்கு சொந்தமான கொள்கலனில் அனுப்பப்பட்ட சந்தேகத்திற்கிடமான விமான அஞ்சல் பெட்டியில் இந்த போதைப் பொருள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
குறித்த சரக்கு மிகவும் பாதுகாப்பான முறையில் பொலித்தீன் பைகலில் அடைக்கப்பட்ட சுமார் 5,716 வில்லைகளை கொண்ட பொதி என சுங்கப்பிறிவினர் தெறிவித்துள்ளனர்.
குறித்த இந்த சரக்கு கொழும்பு, புதுக்கடை பகுதியில் வசிக்கும் 35 வயதுடைய நபர் ஒருவரின் பெயரில் பரிசாக அனுப்பப்பட்டிறுந்தமை குறிப்பிடத்தக்கது.
சுங்க அதிகாரிகள் சந்தேக நபரைத் தேடி கைது செய்ததை அடுத்து, அவரிடம் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.