இலங்கையின் பல பகுதிகள் முடக்கப்பட்டுள்ளதாக வெளியான தகவலில் எந்தவித உண்மையில்லை என்று கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கை செயலணியின் தலைவர் இராணுவ தளபதி ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
செய்தியாளர்களிடம் இதனை தெரிவித்த அவர் போலியான செய்திகளை நம்பவேண்டாம் என பொதுமக்களை கோரியுள்ளார்.
இதேவேளை கந்தக்காடு புனர்வாழ்வு நிலையம் மற்றும் சிகிச்சை நிலையம் ஆகியவற்றில் இருந்து தற்போது வீடுகளுக்கு சென்றுள்ள அனைவரையும் மீண்டும் நிலையங்களுக்கு அழைத்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில் இதில் பெரும்பாலானோர் மீண்டும் திரும்பிவிட்டதாகவும் ஏனையோர் விரைவில் கட்டுக்கெலியாவ நிலையத்துக்கு அனுப்பப்படுவர் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.