கொரோனா கட்டுப்பாடுகளை தீவிரபடுத்தும் பொலிஸார் !!!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

கொரோனா கட்டுப்பாடுகளை தீவிரபடுத்தும் பொலிஸார் !!!

கொரொனா வைரஸ் பரவலை தொடர்ந்து விதிக்கப்பட்டிருந்த கடுமையான கட்டுப்பாடுகளை மீண்டும் அமுல்படுத்துவதாக இல்லையா என்பது மக்களின் செயற்பாட்டிற்கமையவே என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மக்கள் தொடர்ந்தும் பாதுகாப்புடன் செயற்படுவது அத்தியாவசியமாகும் என பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

கொரோனா ஆபத்து இன்னமும் குறைவடையவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார். கொரோனாவை கட்டுப்படுத்துவதற்கு மக்கள் வெளிப்படுத்திய அக்கறை தற்போது குறைவடைந்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.


இதேவேளை, நாட்டில் கொரோனா வைரஸ் பரவும் 4 இடங்கள் தற்போது அடையாளம் காணப்பட்டுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் வைத்தியர் செனால் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் பரவல் தொடர்பில் மீண்டும் ஆபத்தான நிலைமை ஏற்பட்டுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் குறிப்பிட்டுள்ளார். இதனால் பீசீஆர் பரிசோதனைகளை மேலும் அதிகரிக்க வேண்டும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

அத்துடன் கொரோனா நோயாளர்கள் தொடர்பில் போலி பிரச்சாரங்கள் முன்னெடுப்பவர்களுக்கு எதிராக கடுமையாக சட்டத்தை செயற்படுத்துவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.