Updated: கொழும்பு வெலிகட சிறைச்சாலைக்குள்ளும் கொரோனா! இரண்டாம் அலை!???

advertise here on top
Join YazhNews WhatsApp Community

Updated: கொழும்பு வெலிகட சிறைச்சாலைக்குள்ளும் கொரோனா! இரண்டாம் அலை!???

கொழும்பு, வெலிக்கடை சிறைச்சாலையில் கைதி ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதாக சுகாதார பணிப்பாளர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.

இந்த கைதி கந்தக்காடுவில் அமைந்துள்ள போதைப்பொருள் புனர்வாழ்வு நிலையத்தில் இருந்து கடந்த 27ஆம் திகதி வெலிக்கடை சிறைச்சாலைக்கு மாற்றி அனுப்பப்பட்டுள்ளார்.


இவ்வாறு அடையாளம் காணப்பட்ட நோயாளியுடன் நெருங்கி செயற்பட்டவர்களுக்கு PCR பரிசோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது. அத்துடன் குறித்த நோயாளியுடன் நெருங்கி செயற்பட்டவர்களை தனிமைப்படுத்துவதற்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இவர்களுக்கான பரிசோதனை நடவடிக்கைகளை மேற்கொள்ளும் பொறுப்பு சிறைச்சாலை அதிகாரிகளுக்கு வழங்கப்பட்டுளள்ளது.

வெலிசர கடற்படை முகாமிலிருந்து கடற்படை வீரர் ஒருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதை அடுத்து சுமார் 800 இற்கும் முற்பட்ட கடற்படையினருக்கு தொற்று ஏற்பட்டிருந்தது. இந்நிலையில் சிறைச்சாலைக்குள் நோயாளி ஒருவர் அடையாளம் காணப்பட்டுள்ளார். இவர் பல கைதிகளுக்கு தொற்று ஏற்பட்டிருக்கலாம் என அச்சம் வெளியிடப்பட்டுள்ளது.

Updated at 12:10pm
🚨 திருத்தம் : வெலிகடை சிறைச்சாலையிலிருந்து இனங்காணப்பட்ட கொரோனா தொற்றாளர் வெலிகடை சிறைச்சாலை கைதிஇல்லை என அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.