MYBUS.SL எனும் பெயரில் குறித்த செயலி அறிமுகப்படுத்தப்படவுள்ள தாக ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம், கமாண்டர் நிலான் மிரண் டா தெரிவித் துள்ளார்.
இதன் ஊடாக பொது போக்குவரத்து சேவை பயணிகள் தாமதமின்றி பெற முடியும்.
பயண தூரம், பஸ் கட்டணம் ஆகியவற்றை இதன்மூலம் அறிந்துகொள்ள முடியும் எனவும் GPS தொழில்நுட்பத்தினூடாக பஸ் பயணிக்கும் பகுதியை அறிந்துகொள்ள முடியும் எனவும் அவர் தெரிவித்தார்.
அத்துடன் MYBUS.SL செயலி மூலம் பயணிகள் போக்குவரத்து ஆணைக்குழுவிடம் முறைப்பாடுகளை முன்வைக்க முடியும் எனவும் தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.
மேலும் பஸ்களில் முற்பதிவு செய்து கொள்ள முடியும் எனவும் இணையதளம் ஊடாக பணம் செலுத்த முடியும் எனவும் தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் கமாண்டர் நிலான் மிரண்டா குறிப்பிட்டுள்ளார்.