நாட்டின் பொருளாதாரம் எவ்வாறு வீழ்ச்சியடைந்துள்ளது என்பது தேர்தலுக்கு பின்னர் வெளிப்படும் - ரணில்

advertise here on top
Join YazhNews WhatsApp Community

நாட்டின் பொருளாதாரம் எவ்வாறு வீழ்ச்சியடைந்துள்ளது என்பது தேர்தலுக்கு பின்னர் வெளிப்படும் - ரணில்

தேசியத்தும் குறித்து எமக்குள்ள அக்கறையை நாட்டு மக்கள் அறிவர். பெரும்பான்மை மற்றும் சிறுபான்மை இனங்களின் அடிப்படைவாதிகள் எம்முடன் பங்குதாரர்களாக இல்லை என தெரிவித்த ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க , தேசிய பொருளாதாரத்தின் வீழ்ச்சி எதிர்மறை எண்ணாகவே காணப்படுகின்ற நிலையில் அரசாங்கம் உண்மைகளை மறைப்பதோடு தேர்தலின் பின்னர் தற்போதைய அரசாங்கத்தின் இயலாமையும் பொருளாதார வீழ்ச்சியின் தாக்கத்தையும் மக்கள் உணரும் நிலை ஏற்படும் என்றும் எச்சரித்தார்.

ஐக்கிய தேசிய கட்சியின் உறுப்பினர்கள் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவை அவரது இல்லத்தில் இன்று சந்தித்த போதே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

அவர் தொடர்நதும் கூறுகையில் ,

தேசிய வளங்கள் மற்றும் புராதன மரபுரிமைகளை பாதுகாக்க வந்த அரசாங்கம் தற்போது தொல்பொருள் சட்டத்திற்கே சவால் விடுத்துள்ளது. 2 ஆம் புவனேகுபாகு மன்னனின் அரசவை மண்டபம் உடைக்கப்பட்டதன் பின்னணியில் ஆளும் கட்சியின் முக்கியஸ்தர்கள் பலரும் உள்ளனர் என்பதே உண்மையாகும். அந்த சம்பவத்தையடுத்து தற்போது ஏற்பட்டுள்ள எதிர்பலைகளினால் குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்கப்பட வேண்டியது அவசியமாகும்.

2001 ஆம் ஆண்டு 1.6 மேலாண்மை எதிர்மறை எண்ணாக வீழ்ச்சிக் கண்டிருந்த நாட்டின் பொருளாதாரத்தை ஐக்கிய தேசிய கட்சி 7 வீத வளர்ச்சி புள்ளியை நோக்கி கொண்டுச் சென்றது. தற்போதைய தேசிய பொருளாதாரத்தின் வீழ்ச்சி எதிர்மறை எண்ணாகவே காணப்படுகிறது. ஆனால் அரசாங்கம் உண்மைகளை மறைக்கிறது. தேர்தலின் பின்னர் தற்போதைய அரசாங்கத்தின் இயலாமையும் பொருளாதார வீழ்ச்சியின் தாக்கத்தையும் மக்கள் உணரும் நிலை ஏற்படும்.

Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.