இம்முறை சாதாரண தர பரீட்சைகளுக்கு தோற்றும் மாணவர்களுக்கான விசேட அறிவித்தல்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

இம்முறை சாதாரண தர பரீட்சைகளுக்கு தோற்றும் மாணவர்களுக்கான விசேட அறிவித்தல்!

எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 31ஆம் திகதிக்கு முன்னர் க.பொ.த சாதாரண தரப் பரீட்சைக்கான விண்ணப்பங்களை அனுப்பி வைக்குமாறு பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

தனிப்பட்ட பரீட்சார்த்திகள் இலங்கை பரீட்சைகள் திணைக்களத்தின் இணையத்தளம் ஊடாக விண்ணப்பத்தினைப் பூரணப்படுத்த வேண்டும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
$ads={1}
பூரணப்படுத்தப்பட்ட விண்ணப்பங்களை பிடிஎப் ஆக தரவிறக்கம் செய்து, அச்சுப்பிரதி எடுத்து, விண்ணப்பதாரியினதும், கிராம சேவகரினதும் கையொப்பம் இட்டு, பரீட்சைத் திணைக்களத்திற்கு தபாலில் அனுப்பி வைக்க வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

பாடசாலைகளில் இருந்து விடுகைப் பத்திரம் பெற்றுக் கொண்டவர்கள் மாத்திரமே தனிப்பட்ட பரீட்சார்த்தியாக விண்ணப்பிக்க தகைமை கொண்டுள்ளனர்.

இதேவேளை பாடசாலையில் கற்றுக் கொண்டே தனிப்பட்ட பரீட்சார்த்தியாக பரீட்சைக்கு விண்ணப்பிக்க முடியாது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.