இவர்களில், 21 பேர் ஹோமாகம வைத்தியசாலையிலிருந்தும், 09 பேர் காத்தான்குடி வைத்தியசாலையிலிருந்தும், 04 பேர் அங்கொடை தொற்று நோய் வைத்தியசாலையிலிருந்தும்,02 பேர் வெலிகந்த ஆதார வைத்தியசாலையிலிருந்தும், இரணவில வைத்தியசாலை மற்றும் மினுவங்கொடை வைத்தியசாலையிலிருந்து தலா ஒருவரும் பூரண குணமடைந்து வெளியேறியுள்ளனர் என சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.
அதன்படி இலங்கையில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 1,955 ஆக உயர்வடைந்துள்ளது.
இதேவேளை, இலங்கையில் 2,078 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ள நிலையில், அதில் 112 பேர் நாடு முழுவதும் உள்ள 10 வைத்தியசாலையில் தங்கி சிகிச்சைபெற்று வருகின்றனர்.
அத்துடன் 35 பேர் கொரோனா தொற்று சந்தேகத்தில் வைத்திய கண்காணிப்பில் உள்ளனர்.