கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கையில் உயர்வு!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கையில் உயர்வு!

நாட்டில் இன்றையதினம் செவ்வாய்க்கிழமை மேலும் 38 கொரோனா தொற்றாளர்கள் குணமடைந்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இவர்களில், 21 பேர் ஹோமாகம வைத்தியசாலையிலிருந்தும், 09 பேர் காத்தான்குடி வைத்தியசாலையிலிருந்தும், 04 பேர் அங்கொடை தொற்று நோய் வைத்தியசாலையிலிருந்தும்,02 பேர் வெலிகந்த ஆதார வைத்தியசாலையிலிருந்தும், இரணவில வைத்தியசாலை மற்றும் மினுவங்கொடை வைத்தியசாலையிலிருந்து தலா ஒருவரும் பூரண குணமடைந்து வெளியேறியுள்ளனர் என சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.


அதன்படி இலங்கையில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 1,955 ஆக உயர்வடைந்துள்ளது.

இதேவேளை, இலங்கையில் 2,078 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ள நிலையில், அதில் 112 பேர் நாடு முழுவதும் உள்ள 10 வைத்தியசாலையில் தங்கி சிகிச்சைபெற்று வருகின்றனர்.

அத்துடன் 35 பேர் கொரோனா தொற்று சந்தேகத்தில் வைத்திய கண்காணிப்பில் உள்ளனர்.

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.