அந்த ஹோட்டல் நடத்திய உரிமையாளரின் மகனது பெயரே புவனேக எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
குருணாகல் பிரதேசத்தில் நேற்று நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டம் ஒன்றில் மக்களிடம் உரையாடும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
கூட்டத்தில் கலந்து கொண்டவர்களில் ஒருவர் - சேர் எமது ராஜதானி இடிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் சேர் எதுவும் கூறவில்லையே என கேள்வி எழுப்பியுள்ளார்.
ஜனாதிபதி இதற்கு பதிலளிக்கையில் - புவனேகவின் ஹோட்டலா?. அது ராஜதானி அல்ல உரிமையாளரின் மகனே புவனேக என்பவர் (சிரிக்கின்றார்).
நான் நகர அபிவிருத்தி அதிகார சபையில் இருந்த போது அதனை புனரமைக்க வழங்குமாறு கேட்டோம், அவர் முடியாது என்று சொன்னார். அந்த புவனேகதானே.. என ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
எது எப்படி இருந்த போதிலும் குருணாகல் ராஜதானியை ஆட்சி செய்த இரண்டாவது புவனேகபாகு மன்னனின் அரச மண்டபம் என கூறப்படும் இடத்தை குருணாகல் மாநகர சபை இடித்து தரைமட்டமாகியது சம்பந்தமாக சமூகத்தில் எதிர்ப்புகள் கிளம்பிய நிலையில், அது குறித்து விசாரணை நடத்த பிரதமர் மகிந்த ராஜபக்ச குழு ஒன்றை நியமித்தார். குழுவின் அறிக்கை கிடைத்த பின்னர் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் பிரதமர் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.