புவனேகபாகுவின் அரச மண்டபம் தொடர்பில் ஜனாதிபதி - குருணாகலை பிரச்சாரத்தில்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

புவனேகபாகுவின் அரச மண்டபம் தொடர்பில் ஜனாதிபதி - குருணாகலை பிரச்சாரத்தில்!

குருணாகலில் இடிக்கப்பட்டது புவனேகபாகுவின் அரச மண்டபம் அல்ல என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

அந்த ஹோட்டல் நடத்திய உரிமையாளரின் மகனது பெயரே புவனேக எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

குருணாகல் பிரதேசத்தில் நேற்று நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டம் ஒன்றில் மக்களிடம் உரையாடும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

கூட்டத்தில் கலந்து கொண்டவர்களில் ஒருவர் - சேர் எமது ராஜதானி இடிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் சேர் எதுவும் கூறவில்லையே என கேள்வி எழுப்பியுள்ளார்.

ஜனாதிபதி இதற்கு பதிலளிக்கையில் - புவனேகவின் ஹோட்டலா?. அது ராஜதானி அல்ல உரிமையாளரின் மகனே புவனேக என்பவர் (சிரிக்கின்றார்).

நான் நகர அபிவிருத்தி அதிகார சபையில் இருந்த போது அதனை புனரமைக்க வழங்குமாறு கேட்டோம், அவர் முடியாது என்று சொன்னார். அந்த புவனேகதானே.. என ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

எது எப்படி இருந்த போதிலும் குருணாகல் ராஜதானியை ஆட்சி செய்த இரண்டாவது புவனேகபாகு மன்னனின் அரச மண்டபம் என கூறப்படும் இடத்தை குருணாகல் மாநகர சபை இடித்து தரைமட்டமாகியது சம்பந்தமாக சமூகத்தில் எதிர்ப்புகள் கிளம்பிய நிலையில், அது குறித்து விசாரணை நடத்த பிரதமர் மகிந்த ராஜபக்ச குழு ஒன்றை நியமித்தார். குழுவின் அறிக்கை கிடைத்த பின்னர் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் பிரதமர் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.