மாங்குளம் பகுதியிலிருந்து வவுனியா நோக்கிச்சென்ற குறித்த கொள்கலன் கனகராயன்குளம் பகுதியில் சென்றுகொண்டிருந்த போது, வாகனத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாக கட்டுப்பாட்டை இழந்து தடம்புரண்டு விபத்திற்குள்ளாகியது.
விபத்தில் கொள்கலனின் சாரதியான கேகாலை பகுதியை சேர்ந்த ஒருவர் காயமடைந்துள்ளார்.
இதையடுத்து விபத்து தொடர்பாக கனகராயன்குளம் பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

