இதன் அடிப்படையில், பொதுத் தேர்தலுக்காக ஒரு கோடியே 72 லட்சம் வாக்காளர் அட்டைகள் அச்சிடப்பட்டுள்ளன. இந்த வாக்காளர் அட்டைகளை தேர்தல் ஆணைக்குழு எதிர்வரும் 11,12 மற்றும் 13 ஆம் திகதிகளில் தபால் திணைக்களத்திடம் கையளிக்க உள்ளது.
அதேவேளை உத்தியோகபூர்வ தேர்தல் விளம்பர பிரசுரங்களை எதிர்வரும் 29ஆம் திகதிக்குள் விநியோகித்து முடிக்க எதிர்பார்த்துள்ளதாக தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மகிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.