அது தொடர்பாக ஊடகவியலாளரினை சந்தித்து பேசிய முன்னாள் கிரிக்கட் அணித்தலைவர் மஹேல ஜயவர்தன
புலனாய்வுபிரிவினரால் எனது வழக்கறிஞரினூடாக இன்று அறிக்கை வழங்க எனக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது, நேற்று (02) இரவு 11:30 மணியளவில் எனக்கு தொலைப்பேசி அழைப்பு விடுத்து இன்று வராமல், வேரொரு நாளில் வருமாறு அவர்கள் கூறியிருந்தார்கள். சிலஊடகங்கள் எனது தனிப்பட்ட பிரச்சினையாலேயே இன்று என்னால் வர முடியாமல் போனதாக செய்திகள் வெளியிட்டிருந்தன. அதனால் தான் நான் அவர்களுக்கும் கூறிவிட்டு இன்று வந்தேன். நான் கிரிக்கட் விளையாட்டை நேசிப்பவர். புலனாய்வு பிரிவினருக்குதேவையானவற்றை சொல்வது எனது கடமையாகும்
2011 உலகக் கிண்ண இறுதிப்போட்டி ஊழல் தொடர்பில் முன்னாள் அமைச்சர் மஹிந்தானந்த அலுத்கமகே வெளியிட்ட அறிக்கையின்காரணமாகவே இவ்வாறு முன்னாள் அணித்தலைவர் மஹேக ஜயவர்தன அழைக்கப்பட்டிருந்தார்.