AUDIO : வர வேண்டாம் என்று கூறியும் மஹேல ஏன் வந்தார்?

advertise here on top
Join YazhNews WhatsApp Community

AUDIO : வர வேண்டாம் என்று கூறியும் மஹேல ஏன் வந்தார்?

அறிக்கையொன்றினை பெற்றுக் கொள்வதற்காக இலங்கை கிரிக்கட் அணியின் முன்னாள் தலைவர் மஹேல ஜயவர்தன இன்று (03) விளையாட்டு தவறுகளைத் தடுக்கும் சிறப்பு புலனாய்வு பிரிவிற்கு காலை வருகை தந்திருந்தார். இருந்தாலும் இன்று அவரிடம்அறிக்கையேதும் பெறப்படவில்லை.


அது தொடர்பாக ஊடகவியலாளரினை சந்தித்து பேசிய முன்னாள் கிரிக்கட் அணித்தலைவர் மஹேல ஜயவர்தன
புலனாய்வுபிரிவினரால் எனது வழக்கறிஞரினூடாக இன்று அறிக்கை வழங்க எனக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது, நேற்று (02) இரவு 11:30 மணியளவில் எனக்கு தொலைப்பேசி அழைப்பு விடுத்து இன்று வராமல், வேரொரு நாளில் வருமாறு அவர்கள் கூறியிருந்தார்கள். சிலஊடகங்கள் எனது தனிப்பட்ட பிரச்சினையாலேயே இன்று என்னால் வர முடியாமல் போனதாக செய்திகள் வெளியிட்டிருந்தன. அதனால் தான் நான் அவர்களுக்கும் கூறிவிட்டு இன்று வந்தேன். நான் கிரிக்கட் விளையாட்டை நேசிப்பவர். புலனாய்வு பிரிவினருக்குதேவையானவற்றை சொல்வது எனது கடமையாகும்

2011 உலகக் கிண்ண இறுதிப்போட்டி ஊழல் தொடர்பில் முன்னாள் அமைச்சர் மஹிந்தானந்த அலுத்கமகே வெளியிட்ட அறிக்கையின்காரணமாகவே இவ்வாறு முன்னாள் அணித்தலைவர் மஹேக ஜயவர்தன அழைக்கப்பட்டிருந்தார்.

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.