பொதுத்தேர்தல் முடிவுகளை வெளியிடும் நேரம் தொடர்பான அறிவிப்பு!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

பொதுத்தேர்தல் முடிவுகளை வெளியிடும் நேரம் தொடர்பான அறிவிப்பு!

பொதுத் தேர்தலின் உத்தியோகபூர்வ முடிவுகள் ஓக்ஸ்ட் மாதம் 6 ஆம் திகதி மாலை தேநீர் இடைவெளிக்கு முன்னர் வெளியிடுவதற்கு எதிர்பார்த்துள்ளதாக தேர்தல்கள் ஆணையாளர் மகிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

தேர்தல்கள் ஆணைக்குழுவில் இன்று (26) இடம்பெற்ற விசேட கலந்துரையாடலுக்கு பின்னர் ஊடகங்களிடம் கருத்து தெரிவிக்கும் போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

அனைத்து தெரிவத்தாட்சி அதிகாரிகளும், மாவட்ட பிரதி தேர்தல் ஆணையாளர்களும் இந்த கலந்துரையடாலில் பங்கேற்றிருந்தனர்.

அத்துடன் குறித்த கலந்துரையாடலில் அஞ்சல்மா அதிபர், உள்நாட்டலுவல்கள் அமைச்சின் செயலாளர், மருத்துவ சபையின் பேராசிரியர் மற்றும் பிரதி காவல்துறைமா அதிபர் பிரியந்த வீரசூரியவும் கலந்து கொண்டிருந்தனர்.

வாக்களிப்பு நிலையங்கள் மற்றும் வாக்கு எண்ணும் நிலையங்களில் தொற்று நீக்குவது தொடர்பில் இதன்போது அதிக அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.

அத்துடன் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளவர்கள் வாக்களிக்கும் போது ஏற்படும் பிரச்சினைகளை குறைப்பது மற்றும் அது தொடர்பில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பிலும் இதன்போது கலந்துரையாடப்பட்டதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தவிசாளர் மகிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.
Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.