அதேவேளை, நாட்டின் அனைத்து பிரஜைகளினதும் புதிய பிறப்புச் சான்றிதழ்களில் ‘இலங்கையர்’ என குறிப்பிடப்படும் என பதிவாளர் நாயகம் என்.சீ. விதானகே தெரிவித்திருந்த போதிலும், இது தொடர்பில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆலோசனைகளை வழங்கியுள்ளதாகவும் அமைச்சர் விமல் வீரவன்ச கடுவலை பிரதேசத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பின்போது தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
“பிறப்பு மற்றும் விவாக சான்றிதழ்களில் இனம், மதம் உள்ளடக்கப்படுவதில்லை என பதிவாளர் நாயகம் கூறியதை கண்டதும் ஆச்சரியமடைந்தேன்.
அதனை கண்டதும் உடனே பிரதமர் குறித்த அமைச்சின் செயலாளருடன் உரையாடி அதனை சரி செய்யுமாறு கூறியிருந்தார்.
இதனை நான் ஜனாதிபதிக்கும் கூறினேன். யாரு என்ன சொன்னாலும் குறித்த பிறப்பு சான்றிதழ் இந்த தலைமையின் கீழ் மாற்றப்படாது.” என தெரிவித்துள்ளார்.

