
கண்டி, தவுலகல பிரதேசத்தில் இன்று (30) நடைபெற்ற பிரசாரக் கூட்டம் ஒன்றில் உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
பல்வேறு காரணங்களினால் கடந்த காலத்தில் முஸ்லிம் மக்கள் எம்மை விட்டு விலகிச் சென்றனர். இம்முறை தேர்தலில் அவர்கள் சரியான தீர்மானத்தை எடுப்பார்கள்.
எனது அரசாங்கமே முஸ்லிம் மக்களுக்காக அதிகமான சேவைகளை செய்துள்ளது. ஒரு முறை எனது அரசாங்கத்தில் அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்கள் பிரதியமைச்சர்கள் என 28 முஸ்லிம்கள் பதவி வகித்தனர்.
எனது அரசாங்கம் எப்போதும் இன, மத பேதங்களை அடிப்படையாக கொண்டு செயற்பட்டதில்லை. பௌத்த தர்மத்திற்கு அமைய அப்படியானதை செய்ய முடியாது.
விடுதலைப்புலிகள் அன்று காத்தான்குடியில் நூற்றுக்கணக்கான முஸ்லிம்களை சுட்டுக்கொன்ற போதும், முஸ்லிம் மக்கள் வயல்கள், பள்ளிவாசல்களுக்கு செல்ல இராணுவ பாதுகாப்பை வழங்கினோம். தமது கிராமங்களில் வாழ முடியாது சேருவில் பகுதிக்கு வந்த முஸ்லிம் மக்களை பாதுகாப்புடன் அவர்களின் கிராமங்களில் குடியேற்ற நடவடிக்கை எடுத்தோம்.
எனது அரசாங்கம் அனைத்து இன மக்களுக்கும் சேவைகளை செய்த அரசாங்கம் என்பதை ஏற்கனவே ஒப்புவித்துள்ளதாகவும் பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.