கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 3 பேர் அடையாளம் காணப்பட்ட நிலையில் இந்த அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோய் தடுப்புப் பிரிவு தெரிவிக்கின்றது.
இதேவேளை, 16 பேர் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
இதன்படி, நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 2,333 ஆக உயர்வடைந்துள்ளது.
இந்த நிலையில், 86 பேர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி இருக்கலாம் என்ற சந்தேகத்தில் அடிப்படையில் கண்காணிக்க்படப்டு வருகின்றனர்.
அத்துடன், 470 பேர் தொடந்தும் வைத்தியசாலைகளில் இருந்து சிகிச்சைப்பெற்று வருகின்றனர்.
இதேவேளை, பொலன்னறுவை லங்காபுர பிரதேச செயலகத்தை தற்காலகமாக மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.