முன்னதாக ஆகஸ்ட் 01ஆம் திகதி முதல் விமான நடவடிக்கைகளுக்காக விமான நிலையத்தை திறக்க முடிவு செய்யப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
இருப்பினும், தற்போதைய சூழ்நிலை காரணமாக விமான நிலையம் திறக்கப்படுவதை ஒத்திவைக்க வேண்டியிருக்கும் என்று வெளிவிவகாரங்களுக்கான ஜனாதிபதியின் செயலாளர் ஜயநாத் கொலம்பகே தெரிவித்தார்.
நாட்டில் கோவிட் வைரஸ் அதிகரித்து வரும் ஆபத்து மற்றும் இலங்கையுடன் விமான தொடர்பு கொண்ட பல நாடுகளில் இந்த வைரஸ் இன்னும் பரவலாக இருப்பதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது என்று செயலாளர் கூறினார்.