CIDயின் முன்னால் பணிப்பாளர் ஷானி அபேசேகர கைது!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

CIDயின் முன்னால் பணிப்பாளர் ஷானி அபேசேகர கைது!

குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் ஷானி அபேசேகர கைது செய்ப்பட்டுள்ளதாக கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பணி நீக்கம் செய்யப்பட்டுள்ள குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் ஷானி அபேசேகர சாட்சிகளை மறைத்த குற்றச்சாட்டிலேயே கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஷானி அபேசேகர இன்று (31) காலை அவரது வீட்டில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதேவேலை, நேற்று அபேசேகர உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த அடிப்படை உரிமைகள் (FR) மனுவை வாபஸ் பெற்றிருந்தார்.

முன்னதாக மற்றொரு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளதால் சமீபத்திய மனு வாபஸ் பெறப்பட்டதாக அவரது வழக்கறிஞர்கள் நீதிமன்றத்திற்கு தெரிவித்தனர்.

மேலும், அப்போது எதிர்க்கட்சியில் இருந்த, இப்போது ஆட்சியில் இருக்கும் பல அரசியல்வாதிகள் சம்பந்தப்பட்ட உயர் வழக்குகள் குறித்து அபேசேகர விசாரணைகளை நடத்தியிறுந்தார்.

எது எவ்வாறாயினும், தற்போதைய அரசாங்கம் அபேசேகர ஒரு அரசியல் நாடகம் நடத்தியதாக குற்றம் சாட்டும் நிலையில், ​​அபேசேகராவை தற்போதைய அரசின் அதிகாரிகள் பழிவாங்குவதாக எதிர்க்கட்சி குற்றம் சாட்டி வருகிறது.

(கொழும்பு வர்த்தமானியின் உள்ளீடுகளுடன்)
Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.