பணி நீக்கம் செய்யப்பட்டுள்ள குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் ஷானி அபேசேகர சாட்சிகளை மறைத்த குற்றச்சாட்டிலேயே கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஷானி அபேசேகர இன்று (31) காலை அவரது வீட்டில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதேவேலை, நேற்று அபேசேகர உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த அடிப்படை உரிமைகள் (FR) மனுவை வாபஸ் பெற்றிருந்தார்.
முன்னதாக மற்றொரு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளதால் சமீபத்திய மனு வாபஸ் பெறப்பட்டதாக அவரது வழக்கறிஞர்கள் நீதிமன்றத்திற்கு தெரிவித்தனர்.
மேலும், அப்போது எதிர்க்கட்சியில் இருந்த, இப்போது ஆட்சியில் இருக்கும் பல அரசியல்வாதிகள் சம்பந்தப்பட்ட உயர் வழக்குகள் குறித்து அபேசேகர விசாரணைகளை நடத்தியிறுந்தார்.
எது எவ்வாறாயினும், தற்போதைய அரசாங்கம் அபேசேகர ஒரு அரசியல் நாடகம் நடத்தியதாக குற்றம் சாட்டும் நிலையில், அபேசேகராவை தற்போதைய அரசின் அதிகாரிகள் பழிவாங்குவதாக எதிர்க்கட்சி குற்றம் சாட்டி வருகிறது.
(கொழும்பு வர்த்தமானியின் உள்ளீடுகளுடன்)