சம்பவம் தொடர்பில் குறித்த டிப்பர் வண்டி நேற்று (14) முற்பகல் சம்பவம் நடந்த இடத்தில் இருந்து சுமார் 35 கி.மீ தொலைவில் உள்ள ரன்ன எனும் பிரதேசத்தில் வைத்து கண்டு பிடிக்கப்பட்டிருந்தது.
ரன்ன, கட்டகடுவ பிரதேசத்தில் வீடு ஒன்றுக்கு அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில் குறித்த டிப்பர் வாகனம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.
திங்கட்கிழமை இடம்பெற்ற குறித்த விபத்தில் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் உயிரிழந்த நிலையில் மேலும் இரண்டு பொலிஸ் சார்ஜன்ட்கள் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
குறித்த டிப்பர் வண்டியில் வந்த சாரதி, கொலை அச்சுறுத்தல் விடுத்து சென்று, வண்டியை திருப்பிக்கொண்டு வந்து குறித்த போலீசாரை விபத்து ஏட்படுத்தியுள்ளதாக முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இது தொடர்பாக மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக போலிசார் தெரிவித்துள்ளனர்.