இனவாத செயற்பாட்டிற்கு பகிரங்க மன்னிப்பு கோரிய வங்கி!!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

இனவாத செயற்பாட்டிற்கு பகிரங்க மன்னிப்பு கோரிய வங்கி!!

நேற்று (02) சம்பத் வங்கியின் தெஹிவளை கிளையில் வாடிக்கையாளரின் அடையாளம் சம்பந்தமாக நடைபெற்ற சம்பவம் குறித்து, சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு எங்கள் மனமார்ந்த வருத்தத்தை தெரிவிக்க விரும்புகிறோம். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக வங்கி உரிய நடவடிக்கைகளை விரைவில் மேற்கொள்ளும் என பகிரங்க அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

தெஹிவளையில் உள்ள சம்பத் வங்கி கிளைக்கு சென்ற முஸ்லிம் பெண் ஒருவரை தனது பர்தாவை நீக்கி விட்டு உள்ளே வருமாறு வங்கி அதிகாரிகள் வற்புறுத்திய சம்பவத்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இதனை அறிந்து குறித்த பெண்ணின் கணவர் உடனடியாக விரைந்து நியாயம் கேட்டதன் பின்னர் முஸ்லிம் பெண் உள்ளே பர்தாவுடன் அனுமதிக்கப்பட்டார்.

குறித்த காணொளி நேற்று வைரலாக மாறியதன் பின்னர் சம்பத் வங்கி பகிரங்கமாக மன்னிப்பு கோரி வருத்தம் தெரிவித்துள்ளது.

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.