ஹோமாகம பொலிஸார் உட்பட 260 நபர்களின் PCR அறிக்கை வெளியானது!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

ஹோமாகம பொலிஸார் உட்பட 260 நபர்களின் PCR அறிக்கை வெளியானது!

தனிமைப்படுத்தலுக்காக ஹபராதுவ தனிமைப்படுத்தல் நிலையத்திற்கு அழைத்து வரப்பட்ட ஹோமாகம உதவி பொலிஸ் அதிகாரிமற்றும் பொலிஸ் நிலைய 16 அதிகாரிகளுக்கு கொரோனா தொற்று இல்லை என உறுதி செய்யப்பட்டுள்ளது.

அவர்களுக்கு மேற்கொள்ளப்பட்ட PCR பரிசோதனைகளிலிருந்து உறுதி செய்யப்பட்டதாக ஹபராதுவ தனிமைப்படுத்த நிலையபொறுப்பதிகாரி வைத்தியர் சந்திர ஜய்கொடி தெரிவித்தார். இவர்களின் பரிசோதனைகள் காலி கராபிடிய வைத்தியசாலையில்செய்யப்பட்டது. 
$ads={1}
இது வரையில் ஹபராதுவை தனிமைப்படுத்தல் நிலையத்தில் 580 நபர்களுக்கு PCR பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும்ஹபராதுவ தனிமைப்படுத்த நிலைய பொறுப்பதிகாரி வைத்தியர் சந்திர ஜய்கொடி தெரிவித்தார்.

அதே போன்று கந்தகாடு புணர்வாழ்வு மையத்தில் கொரோனா தொற்றுக்குள்ளான நபருடன் தொடபான 251 நபரகளுக்கும் PCR பரிசோதனைகள் செய்யப்பட்டதோடு, அவர்கள் அனைவருக்கும் கொரோனா தொற்று இல்லை என உறுதி செய்யப்பட்டதா அவர்மேலும் தெரிவித்தார்.

மேலும் கொரோனா தொற்றுக்கு இலக்கான இலங்கை கடற்படை வீரர்கள் மூவர் மாத்திரமே சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனா தொற்றுக்குள்ளாகி குணமடைந்த 903 கடற்படை வீரர்கள் வீடு திரும்பியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.