
இலங்கையில் சற்று முன்னர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை மேலும் 14 நபர்களால் அதிகரித்துள்ளது.
இவ்வாறு அடையாளம் காணப்பட்டவர்கள் அனைவரும் சவூதியில் இருந்து வந்து தனிமைப்படுத்தல் மையங்களில் இருந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, மொத்த எண்ணிக்கை 2,745 ஆக பதிவாகியுள்ளது.
அத்துடன், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் இதுவரை 670 பேர் தொடர்ந்தும் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

